அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது

அடையாளப்படுத்தப்பட்ட துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
QR முறைமை தொடர்பில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது, வாகன பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் எரிபொரள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து அல்லாத ஏனைய எரிபொருள் தேவைகள் மற்றும் சுற்றுலா துறைக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
