அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு செலாவணி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் 30 சதவீதமானவற்றை நிர்வகித்து வரும் மூன்று தனியார் வங்கிகளுக்கு இந்த நிதி வசதி வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வெளிநாட்டு நாணய நிதி கையிருப்பு இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய நிதி நிறுவனத்திற்கான முகாமையாளர் ஜூன் யங் பார்க் தெரிவித்துள்ளார்.