அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தயார்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறது. பரீட்சையில் சித்திபெறும் இருபத்தாறாயிரம் புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
இக்குழுவுக்கு மேலதிகமாக விஞ்ஞான பீடங்களில் சித்தியடைந்த மேலும் ஆறாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன
