அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, ஐந்து வாரங்களின் பின்னர் விவாதிக்கத் தீர்மானம்

அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, ஐந்து வாரங்களின் பின்னர் பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, ஏழு நாட்களின் பின்னர் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்க முடியும் என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
