அரச சார்பற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கடன் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த கடன் திட்டத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இலங்கை வங்கி மாத்திரமின்றி மேலும் மூன்று வங்கிகளும், இக்கடன் திட்டத்தின் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வசதிகளை வழங்கவுள்ளன. இதுதொடர்பான நிபந்தனைகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறாத மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க, 11 லட்சம் ரூபாய் வட்டியில்லா வங்கிக் கடனாகப் பெறலாம். இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஊடாக மாணவர்கள் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னர் குறிப்பிட்டிருந்தார்.