Home » அரிசி கொடுக்க வந்த ஜனாதிபதியின் ஆலோசகர்.

அரிசி கொடுக்க வந்த ஜனாதிபதியின் ஆலோசகர்.

Source
வேலணை மற்றும் தெல்லிப்பளையில் இடம்பெறும் அரிசி வழங்கல் நிகழ்வுகளிற்காக சாகல ரத்னாயக்க மற்றும்  இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் இன்று காலை யாழ். வருகை தந்தனர். ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோரே இவ்வாறு  யாழ்ப்பாணம்  மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை  விஐயம் செய்தனர். 2022/2023 ஆம் ஆண்டின் காலபோக  அரசின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் கொண்ட சமுர்த்தி நிவாரணம் பெறும்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி  பகிர்ந்தளித்தல் நிகழ்வு இன்று  இடம்பெறுகின்றது. இந்த  நிகழ்வில் பங்கேற்பதற்காகவே  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்காவுடன்  இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தந்தனர். இவர்களது வருகையையொட்டி  யாழில் வீதிகள் எங்கும்  ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 9.30 மணிக்கு வேலணையிலும் பகல் 11.30 மணிக்கு தெல்லிப்பளையிலும் அரசி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image