இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்த வருடத்திற்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்பதை அடுத்து, பாராளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும்.
நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 முதல் மாலை 5.30 வரை மதியபோசன இடைவேளை இன்றி நிதி ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் பின்னர் இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
