இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு புதுடில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. ஜி-20 அமைப்பில் அங்கத்துவம் பெறாத நாடுகள் உட்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் முக்கிய சவால்கள் பற்றி ஜி-20 உச்சி மாநாட்டின் போது கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருக்கிறார்.