Home » இந்தியா சென்ற 7 பேர் கைது தொடர்பில் சர்ச்சை

இந்தியா சென்ற 7 பேர் கைது தொடர்பில் சர்ச்சை

Source

இந்தியாவிற்கு தப்பிச்  செல்ல எல்லைக்குள் சென்ற 07  பேரை இந்திய எல்லைக்குள் புகுந்து  இலங்கை  கடற்படையினர்  கைது செய்துள்ளதாக இந்தியத் தரப்புக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மன்னார் பகுதி கடல் ஊடாக கிளிநொச்சியைச் சேர்ந்த 7 பேர் படகில் பயணித்து இந்திய எல்லைக்குள் உள்ள திடலில் இறங்கி நின்ற சமயம் இந்திய படகுகள் வர ஏற்பட்ட காலதாமதத்தின்போது இலங்கை கடற்படையினர் உள் நுழைந்து இலங்கை அகதிகளை தூக்கிச் சென்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது  இரண்டு  பெண்கள் மற்றும் 5  சிறுவர்கள்  உட்பட 7 பேரே  சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடிபெயர்வதற்காக கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முற்பட்டபோதே இந்த 7  பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் தற்போது தலைமன்னாரில் கடற்படையினரின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image