இந்தியாவில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றிற்காக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் குழுவினர் எதிர்வரும் 17ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி இந்தியா புதுடெல்லியில் இடம்பெறவுள்ள பாராம்பரிய மற்றும் கலாச்சார மாநாட்டுக்காக இந்தியாவில் இருந்து வந்த அழைப்பின் பேரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமாகன க.துளசி தலைமையிலான குழுவினர் இவ்விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் போது இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் தற்போதைய காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி நடைபெறவுள்ள மாநாட்டில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
AR