Home » இந்திய அல்லது ஆபிரிக்க சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கைக்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இந்திய அல்லது ஆபிரிக்க சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கைக்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Source
Share Button இந்திய அல்லது ஆபிரிக்க சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கு, வல்லரசுகளின் போட்டி அல்லது முரண்பாடுகள் தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும். இந்த நிலையில், நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்த நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தி ஆகின்ற 2048ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும் எனவும் அவை அனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்பணிப்பிலேயே தங்கியுள்ளது. அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image