தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக காரைக்காலில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் ஆறுபேர் பயணித்த படகே இவ்வாறு தாக்குலிற்கு உள்ளானதாக முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலிற்கு இலக்காண 5 பேரில் ஒருவர் மீது கடுமையாகத் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இலங்கை கடற்படையின் 409 இலக்க படகில் வந்த கடற்படையிரே தம்மைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் காரைக்கால் பகெதியில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
TL