இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 12 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு வழியாக தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 4ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் மறாயன் பொலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அகதிகள் நின்ற இடத்திற்கு சென்ற இந்திய கரையோர காவல்படைக்குச் சொந்தமான படகு அகதிகளை மீட்டு இராமேஸ்வரத்திற்கு கொண்டு சென்றது.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் தற்போது பொலிசாரின் விசாரணையில் உள்ளனர்.
இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் ஆண்கள் 03 , பெண்கள்03 மற்றும்.06 சிறுவர்கள் அடங்குகின்றனர்.
TL