தமிழ்நாடு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150 மி.கி மாத்திரைகள் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகளும் அதனை கடத்த பயனபட்ட வள்ளத்தையும் க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணிதர்மராஜ் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றுஆய்வு செய்தனர் அங்கு பதிவு எண் இல்லாமல் இருந்த வள்ளத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த 443 அட்டைகளில் 4 ஆயிரத்து 430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி வள்ளத்தில் உள்ளவர்கள் தப்பிசென்றதால் வள்ளத்தை கைப்பற்றியதோடு மாத்திரைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஓப்படைத்தனர்.
கஞ்சா, பீடி இலை, மஞ்சள், ஏலக்காய் களைக்கொல்லி மருந்து என பல பொருட்கள் கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துகின்றனர்.





ப்ரீகபலின் 150mg மாத்திரை ஒரு வலி எதிர்ப்பு மருந்தாக உள்ளது மற்றும் நரம்பு வலி, நடுக்கம், வலிப்பு முதல் வலி சிகிச்சையாக கருதப்படுகிறது. இது நீரிழிவு நரம்பு வலி, வலிப்பு, தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக் கோளாறு சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
TL