Home » இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை:  தமிழகம் சென்ற அகதி பேட்டி – வீடியோ

இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை:  தமிழகம் சென்ற அகதி பேட்டி – வீடியோ

Source
இலங்கையில் ஆட்சி மாறியுள்ளதே அன்றி காட்சி மாறவில்லையென தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 8  தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் இறங்கிய தகவலறிந்து சம்ப இடத்திற்கு சென்ற இந்திய கடலோர காவல்படையினர்  தமிழர்களை பத்திரமாக மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து ஈழத்  தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு இன று  கிளிநொச்சி மாவட்டம் தர்மாபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர, பார்வதி மற்றும் அவரது பேரன்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த   8  பேர்  மன்னாரில்  இருந்து பைபர்  படகில் நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர். ஈழ அகதிகள் தரை இறங்கிய தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர்  மூன்றாம்  மணல் தீடையிலிருந்தவர்களை    ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு சென்று  ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம்  ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பொருளாதார நிலைமை இன்னும் மாறவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கபட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலை இன்னும் குறைய வில்லை. எனவே பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக  உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது  அகதியாக சென்றவர்கள்   தெரிவித்துள்ளனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. [embedded content] TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image