உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணந்து எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 340 உள்ளுராட்சி மன்றங்களிலும் இரு கட்சிகளும் இணைந்து கூட்டாக போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சில உள்ளராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளதுடன், வேறு சில உள்ளுராட்சி மன்றங்களில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் 54 இணைந்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 13 அமைப்புகள் உள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக பாலித்த ரங்கே பண்டார கூறினார்.