உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசிய கட்சி ஏனைய தரப்புக்களுடன் பேச்சவார்த்தை
உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி, அரசாங்கத்திற்கு ஆதரவுவழங்கும் தரப்புக்களுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஏனைய தரப்புக்களுடனும் இது தொடர்பாகக் கலந்துரையாடப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையைப் பாதூக்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை மாவட்டங்களில் இன்று கட்டுப்பணம் செலுத்தவிருக்கின்றது.