உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் சனிக்கிழமை பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு வரை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.