சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் நிதியின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்;டார்.
இதனிடையே, எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.