தேசிய எரிபொருள் அனுமதி பத்திரமான கியூ.ஆர் முறைமையினை ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும் கியூ.ஆர் முறைமையின் பிரகாரம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை கட்டம் கட்டமாக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இதுகுறித்து நிதியமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.