இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் அதிரடி 5 படகுகளில் பயணித்த 24 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்களின் 5 படகுகில் பயணித்த 24 மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நேற்று இரவு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை இன்று காலை மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இதேநேரம் பிடிக்கப்பட்ட 5 படகுகளில் இருந்த 24 மீனவர்களும் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
TL