தமிழகத்தில் இருந்து கச்சதீவு வலுகைதரவிருந்த பக்தர்களுடன் விண்ணப்பித்த 8 பி.ஜே.பி உறுப்பினர்களிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவத்திற்காக நாளைய தினம் 71 படகுகளில் வருகைதர விண்ணப்பித்த 2 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பித்த 2 ஆயிரத்து 408 பேரில் 6 பேர் கடத்தல் குற்றவியலுடன் தொடர்பு பட்டிரிக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட அதே நேரம் மேலும் 8 பேர் பி.ஜே.பி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்பதனால் அரசியல் சார் அமைப்பாக கருதி அவர்களிற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட விடயம் இந்தியாவின் மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
TL