Home » கச்சதீவில் புத்தர் சிலை; இந்திய நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றார் தொல் திருமாவளவன்

கச்சதீவில் புத்தர் சிலை; இந்திய நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றார் தொல் திருமாவளவன்

Source
கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியுள்ளதாக இந்திய  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு ஒன்றை தொல் திருமாவளவன் அளித்துள்ளார். இலங்கை சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போதுவரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்த்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். எனவே இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு கச்சதீவில் வைத்த புத்தர்  சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image