Home » கச்சதீவில் புத்தர் சிலை இல்லவே இல்லையாம்! – முழுப் பூசணிக்காயை மறைக்கும் இலங்கை கடற்படையினர்

கச்சதீவில் புத்தர் சிலை இல்லவே இல்லையாம்! – முழுப் பூசணிக்காயை மறைக்கும் இலங்கை கடற்படையினர்

Source
கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் நிறுவப்படவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய, பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கச்சதீவில் நானும் இருந்தேன். அந்த இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்தார்கள். அவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், அங்கு சென்றவர்கள் அதைப் பார்வையிட்டிருப்பார்கள் அல்லவா? திருவிழாவின்போது, தீவு முழுவதும் அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் வரை இருந்தார்கள். அருட்தந்தையர்களும் சென்றார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால், அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும் அல்லவா? புத்தர் சிலையை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு புத்தர் சிலை அங்கிருந்தால் நிச்சயமாக அவதானித்திருக்க வேண்டும். படமொன்றையாவது அப்போது எடுத்திருக்க முடியும் அல்லவா? அவ்வாறு ஒன்று இல்லை. நானும் தீவு முழுவதும் சென்றேன். நான் அவ்வாறானதொன்றை அவதானிக்கவில்லை என்றார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image