தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில் மீனவரின் படகு பிளந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் மீன்பிடிக்க வந்த நாட்டுப்படகு மீதே கடற்படையினரின் படகு மோதியதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து சேதமடைந்த படகினை ஊடகவியலாளர்களை அழைத்து காண்பித்துள்ளனர்.
இதேநேரம் சேதமடைந்த படகில் பயணித்த மீனவர்கள் பிறிதொரு படகில் ஏறி தப்பிச் சென்றதோடு சேதமடைந்த படகினையும் கட்டி இழுத்துச் சென்றதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
TL