Home » காரைக்­கால் – காங்­கே­சன் பய­ணி­கள் கப்­பல் ­சேவை மே 15 இல் தான் ஆரம்­பம்

காரைக்­கால் – காங்­கே­சன் பய­ணி­கள் கப்­பல் ­சேவை மே 15 இல் தான் ஆரம்­பம்

Source
காங்­கே­சன்­து­றைக்­கும் காரைக்­கா­லுக்­கும் இடை­யே­யான பய­ணி­கள் கப்­பல் சேவை அடுத்த மாதம் 15ஆம் திக­தியே ஆரம்­ப­மா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக இந்த மாதம் 28ஆம் திகதி சேவை தொடங்­கப்­ப­டும் எனக் குறிப்­பி­டப்­பட்­ட­போ­தும் அது தற்­போது பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்­தப் பட­குச் சேவையை முன்­னெ­டுக்க ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்ள ‘இந்துஸ்ரீ’ பட­குச் சேவை தனி­யார் நிறு­வ­னத்­தின் முகா­மைத்­து­வப் பணிப்­பா­ளர் எஸ்.நிரஞ்­சன் நந்­த­கோ­பன் இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளார். காங்­கே­சன்­துறை மற்­றும் காரைக்­கால் இடையே 4 மணி நேரங்­க­ளைக் கொண்ட இந்­தப் பட­குச்­சே­வைக்கு இந்­திய அரசு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது. அடுத்த மாதம் 15 ஆம் திக­தி­ய­ள­வில் சேவை ஆரம்­ப­மா­கும். காரைக்­கால் துறை­மு­கத்­தின் ஒப்­பு­த­லுக்­காக தற்­போது காத்­தி­ருக்­கி­றோம் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தப் கப்­பல் சேவை­யில் பணி­யாற்­ற­வுள்ள கப்­பல் கப்­டன் மற்­றும் ஆறு பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் இந்­தி­யர்­க­ளா­வர். கப்­பல் சேவை இந்­தி­யக் கொடி­யின் கீழ் நடத்­தப்­ப­டும். சேவை­யில் ஈடு­ப­ட­வுள்ள கப்­பல் சிங்­கப்­பூ­ரில் இருந்து குத்­த­கைக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தக் கப்­பல் சர்­வ­தேச கடல்­சார் தர நிர்­ண­யங்­க­ளைக் கொண்­டது என­வும் நந்­த­கோ­பன் குறிப்­பிட்­டார். பய­ணி­கள் கப்­பல் சேவைக் கட்­ட­ண­மாக 50 அமெ­ரிக்க டொலர் மற்­றும் வரி அற­வி­டப்­ப­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளார். 120 முதல் 150 பேர் வரை பய­ணிக்­கக் கூடிய இந்­தக் கப்­ப­லில் பய­ணிக்­கும் பய­ணி­கள் தலா 100 கிலோ பொருள்­க­ளைக் கொண்டு செல்ல முடி­யும். இந்­தப் பட­கில் பய­ணி­க­ளுக்­கான உண­வ­கம் ஒன்­றும் இயங்­கும். கப்­பல் சேவை ஆரம்­பிக்­கப்­பட்டு முதல் 3 மாதங்­க­ளுக்கு வரி இல்­லாத பய­ணி­கள் சேவையை முன்­னெ­டுக்க இலங்கை அர­சாங்­கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது என­வும் தெரி­வித்­துள்­ளார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image