இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் பதில் முதலமைச்சருமான முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை 17ம் திகதி மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் ஊவா மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடக்கு மாகாண ஆளுநராக அரசு நிர்வாக சேவையில் உள்ள தமிழ் பெண்மணி ஒருவரும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
ஊவா மாகாண ஆளுநராக தற்போதுள்ள ஏஜஏஎம்.. முஸம்மில் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.