.
ஜனரஜ பெரஹரா இன்று மாலை கண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சமாந்தரமாக ஜனாதிபதி செயலகம், புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கண்டி ஸ்ரீதலதா மாளிகை என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன. ஐந்தாவது தடவையாக நடைபெறும் ஜனரஜ பெரஹரா 34 வருடங்களின்பின்னர் இடம்பெறுகின்றது. இதற்கு 1875, 1954, 1981, 1987ஆம் ஆண்டுகளில் இந்தப் பெரஹரா இடம்பெற்றது.
இந்தப் பெரஹராவை முன்னிட்டு இன்று மாலை 5 மணியில் இருந்து கண்டி நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுற்படுத்தப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருக்கின்றது. ஜனரஜ பெரஹராவின் நேரடி அஞ்சலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தி;ன் சிற்றி எவ்.எம். வழங்கவுள்ளது.