ஜீ-20 மாநாட்டில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவை பாராட்டுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்மை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச உறவுகள் இதற்கான பிரதான காரணமாகும். ஜனாதிபதியின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்ப்பிக்கை வலுவடைந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்சமயம் பெற்றுக்;கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.