Home » டயானா கமகே வீட்டில் ஒன்றுகூடிய அமெரிக்க தூதுவர் மற்றும் உயர் புள்ளிகள் முக்கிய பேச்சு

டயானா கமகே வீட்டில் ஒன்றுகூடிய அமெரிக்க தூதுவர் மற்றும் உயர் புள்ளிகள் முக்கிய பேச்சு

Source

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வசிக்கும் தலவத்துகொட, அக்குரேகொடவில். வீட்டிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாவது பிரதிநிதியும் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சரின் கணவர் கலாநிதி சேனக டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் தனிப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image