Home » தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம் ஒருநாள் செயலமர்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம் ஒருநாள் செயலமர்வு

Source

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம் எனும் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிளன் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியன் எயிட்டின் நிதியில் இலங்கை பத்திரிகை தாபனம், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய செயலமர்வின் முதல் அமர்வில், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேரத்ன, ஆணையாளர்களான கிசாலி பின்ரோ ஜயவர்த்தன, முகமட் நாதியா, சட்டத்தரணி ஜகத் லியன ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் என்.நவேஸ்வரன் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.

செயலமர்வின் அறிமுகம் மற்றும் வரவேற்புரையினை இலங்கை பத்திரிகை தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ் நிகழ்த்தினார்.

இதன் போது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன், சட்டம் தொடர்பான பிரச்சினைகள், சந்தேகங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image