துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அழகுசாதன உபகரணங்களை பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக நிதித்துறை ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில் அழகு சாதன உபகரணங்கள் உட்பட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையினை கவனத்தில் கொண்டு, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை மற்றும் சுற்றுலா சபையின் அனுமதியின் பிரகாரம் அந்த உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கூறினார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.