Home » துறைமுகம், விமான நிலையம், பிரயாணிகள் போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

துறைமுகம், விமான நிலையம், பிரயாணிகள் போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

Source
Share Button துறைமுகங்கள், விமான நிலையங்கள், பிரயாணிகள் போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதில் கைச்சாத்திட்டுள்ளார். பிரயாணிகள் மற்றும் பண்டங்களை ஏற்றிச் செல்லல், இறக்குதல், களஞ்சியப்படுத்தல், பகிர்;ந்தளித்தல், உணவு பொருட்கள், நிலக்கரி, எரிபொருள் போன்ற பொருட்களை எந்தவொரு துறைமுகத்திலும் கையாள்தல் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரயாணிகள் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பு நடவடிக்கைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image