Home » தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை

Source
Share Button தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் அரச சபையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்கள், அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஓய்வூதிய முறைமைக்கு கட்டுப்படுவார்கள் என்ற விடயம் அவர்களின் ஆட்சேர்ப்பு நியமனக் கடிதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன்படி தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய சம்பள முறைமையில் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படும். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image