நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2022 – 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பாடசாலைகள் ஜனவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை மூடப்படவிருக்கின்றன. 2022ஆம் ஆண்டு 3ஆம் தவணைக்கான இறுதிக்கட்ட கற்பித்தல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
