நாட்டின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா உதவி
இந்து சமூத்திரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ் ஸ்டீவனுடனான சந்திப்பின் போது அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.
கடற்றொழில் சார்ந்த தொலைத்தொடர்பாடல் துறையை வலுப்படுத்துவதற்கென ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியை வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார். மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்கலைக்கழக முறை பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.