நாட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்த வேலைத்திட்டம்

நாட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நிகழ்ச்சித்;திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்கள் இதன்மூலம் மேம்படுத்தப்படும். இதற்காக விவசாயத்துறை பிரதிநிதிகளிடம் ஆலோசனை பெறப்படும். மாவட்ட இணைப்பு குழுவின் அனுமதியின் பிரகாரம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
