நாளை பிறக்கவுள்ள சிததிரை புத்தாண்டிற்கு மக்கள் தயாராகிக்கொண்டிருக்கிறாhகள்.
இந்தப் புதுவருடம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.59இற்குப் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும், பிற்பகல் 2.03 இற்கு பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும் கூறுகின்றன.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், நாளை முற்பகல் 10.59 தொடக்கம் மாலை 6.59 வரை விஷூ புண்ணிய காலமாகும். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், அன்றைய தினம் முற்பகல் 10.03 தொடக்கம் பிற்பகல் 06.03 வரை புண்ணிய காலமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தலையில் கொன்றை இலையும், காலில் புங்க இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராடுதல் நலம் என்பார்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், கைவிசேஷம் சனிக்கிழமை காலை 6.45 முதல் 7.30 மணி வரையிலான காலப்பகுதியும், காலை 8.00 மணி முதல் 8.55 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 9.30 வரையிலும், அன்றைய தினம் நண்பகல் 12.10 முதல் 1.15 வரையிலுமான காலப்பகுதியும் பொருத்தமானது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, கைவிசேஷம் சனிக்கிழமை காலை 7.52 முதல் 09.00 மணி வரையிலான காலப்பகுதியும், ஞாயிற்றுக்கிழமை காலை 7.49 முதல் 9.48 வரையிலான காலப்பகுதியும் பொருத்தமானது.
புத்தாண்டில் வெள்ளை நிறமுடைய அல்லது வெள்ளைக் கரை அமைந்த பட்டாடைகளை அணிவது சிறப்பானதாகும்.