Home » பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளிப்படைத்தன்மை இல்லை-ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளிப்படைத்தன்மை இல்லை-ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

Source
இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவுக்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை ஏற்காது வரிச்சலுகை ஏற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும். ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் பொது மக்களது தகவல்களின் அடிப்படையிலான செயல்முறையால் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image