பயிற்சிபெற்ற இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அதிகளவான வேலைவாய்ப்பு
இலங்கையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அதிகளவான தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதற்கு இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் உடன்பட்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் தலையீட்டில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தூதுவர் கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஜப்பான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.