பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழில்சார் கல்வியை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பயனுள்ள குடிமக்களாக அவர்களை உருவாக்குவதற்கு அவர்களை தொழில்முறை தகுதி பெற ஊக்குவிப்பது பெற்றோரின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.