பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும். எனினும் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதுபற்றிய ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
