பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கும் கல்வி முறைமை நாட்டுக்கு அவசியம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

பாடசாலை மாணவர்களுக்கு முறையான போசாக்கினை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைவாக பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கும் வேலைத்திட்டத்துக்கு இனங்க, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில்; புதிய பாடங்களை உட்படுத்தி புதிய அனுகுமுறையினை முன்னெடுக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கும் கல்வி முறைமையே நாட்டுக்கு அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவசர் சஜித் பிரேமதாஸ கூறினார்.
