பிரேஸிலில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆயிரத்து 500 பேர் கைது
பிரேஸிலில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர் நீதிமன்றம் ஆகியவற்றினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவின் ஆதரவாளர்களே நேற்று முன்தினம் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இது பயங்கரவாத நடவடிக்கை என அந்நாட்டு ஜனாதிபதி லூலா டா சில்வா விமர்சித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.