புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய பல்கலைக்கழகம்

புதிய ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை பயிற்றுவிப்பதற்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வு பெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்று நாட்டை விட்டு வெளியேறுவதால், ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுமார் 800 நிர்வாக மற்றும் நிர்வாக ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த ஆண்டில் 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகள் வெற்றிடமாக உள்ளன.
நுண்ணறிவு மற்றும் ஆரோக்கியம் போன்ற நவீன பாடங்கள் இந்த நாட்டின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.
எனவே, ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் முப்பத்தைந்தாயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய பல்கலைக்கழகத்திற்கு தேசிய கல்விப் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 32 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
