யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு விசேட வைத்தியசாலைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலை ஒன்றையும் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளர் ஈ.எம்.எஸ்.டி.ஏக்கநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதேவேளை, மருத்துவ ஆய்வுகள் தொடர்பில் நவீன ஆய்வுகூடங்களை அமைப்பது பற்றி ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. குறித்த குழு, ஆய்வறிக்கையினை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது