பெருந்தோட்டத் துறையின் மூலம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 500 கோடி டொலர்களை வருமானமாக ஈட்ட நடவடிக்கை
.
பெருந்தோட்டத் துறையின் மூலம் இந்த ஆண்டில் 400 கோடி அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 500 கோடி டொலர்களை வரை அதிகரிப்பது இலக்காகும். நாட்டில் தலைதூக்கிய உரநெருக்கடி, பொருளாதார சிக்கல்கள், உக்ரேனுக்கும் ரஷ்pயாவிற்கும் இடையிலான மோதல் என்பனவற்றினால் இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.