Home » பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவு நடவடிக்கை நிறைவு

பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவு நடவடிக்கை நிறைவு

Source
Share Button

பெரும்போகத்திற்குத் தேவையான உரங்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்; மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரிய நேரத்தில் உரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பெரம்போகத்தின் போது, நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயன உரங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்திய கடன் திட்டம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவும் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image