பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகல்
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்து கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.