Home » போவோமா ஊர்கோலம்…!- மக்கள் வரிப்பணத்தில் வடக்கு ஆளுநர் சுற்றுலா,

போவோமா ஊர்கோலம்…!- மக்கள் வரிப்பணத்தில் வடக்கு ஆளுநர் சுற்றுலா,

Source
15 நாள்களுக்கு ரூ. 18 லட்சம் செலவு அம்பலப்படுத்திய ஆர்.ரி.ஐ. தகவல் வடக்கு மாகாண ஆளு­ந­ராக 2021 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் பொறுப்­பேற்­றுக்­கொண்­ட­வர் ஜீவன் தியா­க­ராஜா. இலங்­கை­யி­லுள்ள 9 மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­க­ளை­வி­ட­வும் பல தரப்­பு­க­ளி­ன­தும் கவ­னத்­தைப் பெறு­ப­வர்­கள் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­க­ளாக இருப்­ப­வர்­களே. இந்த இரு மாகா­ணங்­க­ளும் கொழும்பு அர­சின் ஆட்­சி­யு­டன் வேறு­ப­டு­ப­வை­யாக இருக்­கின்­றன. இதன் கார­ண­மாக இந்த மாகா­ணங்­க­ளுக்கு ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­கள், கொழும்­பின் தேவையை நிறை­வு­செய்கின்­ற­வர்­க­ ளாக இருக்­கும்­போது அந்த மாகா­ணத்­த­வர்­க­ளு­டன் முரண்­ப­ட­ வேண்டி ஏற்­ப­டும். வடக்­கின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட பத­விக்கு வந்த காலத்­தில், ஜீவன் தியா­க­ராஜா பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளார். அவர் மாகா­ணத்­தின் அதி­கார வரம்பை மீறிச் செயற்­பட்­டி­ருந்­தார். வடக்­கி­லுள்ள அதி­கா­ரி­க­ளு­ட­னான உற­வு­நி­லை­யும் சிறப்­பாக இல்லை. தான் என்ன சொன்­னா­லும் அதை அதி­கா­ரி­கள் ஏன், எதற்கு என்ற கேள்­வி­கேட்­கா­மல், மறு­பேச்­சின்றி செய்­ய­வேண்­டும் என்­ப­து­தான் அவ­ரது நிலைப்­பாடு. இத்­த­கைய ‘என்.ஜி.ஓ’ மனோ­நி­லை­தான் இன்றுவரை­யி­லும் அவர் மீதான சர்ச்­சை­கள் பெரு­கு­வ­தற்கு முக்­கி­ய­மான கார­ணம். இப்­ப­டிப்­பட்ட  வடக்கு மாகாண ஆளு­ந­ரான ஜீவன் தியா­க­ராஜா, நாடே கஞ்­சிக்கு கெஞ்­சிக்­கொண்­டி­ருக்­கை­யில், மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில்  இந்­தி­யா­வுக்கு ஓராண்டுக்கு முன்­னர் சொகு­சுச் சுற்­றுலா சென்­று­வந்­தி­ருக்­கி­றார். இது தொடர்­பான தக­வ­லைக்­கூட வெளி­யி­டு­வ­தற்கு தயக்­கம் காண்­பித்த அவ­ரது செய­லக அதி­கா­ரி­கள், தக­வல் அறி­யும் உரிமை ஆணைக்­கு­ழு­வின் கட்­ட­ளை­யால் வேறு­வ­ழி­யின்றி இப்­போ­து­தான் வெளி­யிட்­டுள்­ள­னர். 2022ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 28ஆம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதி வரை­யி­லான 15 நாள்­கள் இந்­தி­யா­வுக்­கான பய­ணத்தை வடக்கு மாகாண ஆளு­நர் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது இந்­தப் பய­ணம் தொடர்­பில் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­துக்கு அதே ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி,  மின்­னஞ்­சல் ஊடாக தக­வல் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இந்­தத் தக­வல் கோரிக்கை கிடைக்­கப்­பெற்­றதை தபால்­மூ­லம் பதி­ல­ளித்து உறு­திப்­ப­டுத்­தி­யது ஆளு­நர் செய­ல­கம். 14 வேலை நாள்­கள் கடந்­தும் பதில் கிடைக்­கப்­பெ­றா­த­தைத் தொடர்ந்து ஆளு­நர் செய­ல­கத்­துக்­கான மேன்­மு­றை­யீடு அதே­ ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் பின்­ன­ரும் பதில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என்­ப­தால் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­துக்கு அமை­வாக அதே­ ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தக­வல் அறி­யும் உரிமை ஆணைக்­கு­ழு­வில் இது­கு­றித்து முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இது தொடர்­பான விசா­ரணை இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 8 ஆம் திகதி எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. ஆளு­நர் செய­ல­கம் சார்­பில் குறித்­த­ளிக்­கப்­பட்ட அலு­வ­ல­ரான ஆளு­ந­ரின் செய­லர் பொ.வாகீ­சன் ஆணைக்­கு­ழு­வின் அமர்­வுக்கு முன்­னி­லை­யா­க­ வேண்­டி­ய­போ­தும் அவர் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அதே­வேளை ஆளு­நர் செய­ல­கத்­தின் தக­வல் அலு­வ­லரை, தக­வல் அறி­யும் உரிமை ஆணைக்­குழு தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­போ­தும் அது வெற்­றி­ ய­ளிக்­க­வில்லை. ஆனால் அன்­றைய ஆணைக்­குழு அமர்­வுக்கு முன்­ன­தாக வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்தால், தக­வல் கோரிக்­கை­யா­ள­ருக்­கு­ரிய பதில் அனுப் பப்­பட்­ட­தா­கத் தெரி­வித்து அதன் பிரதி ஆணைக்­கு­ழு­ வுக்கு அனுப்பப்பட்டது. ஆணைக்­குழு இது தொடர் பில் தக­வல் கோரிக்­கை­யா­ள­ரி­ட­மும் வின­வி­யி­ ருந்­தது. ஆனால் அவ்­வா­றா­ன­தொரு பதில் கிடைக்கப்பெ­ற­வில்லை என்ற விட­யம் ஆதா­ரங்­க­ளோடு ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. ஆளு­ந­ரின் செய­ல­கம் அனுப்பிவைத்­துள்ள பதில் தொடர்­பில் முறைப்­பா­டு­கள் இருப்­பின் ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­யப்­ப­டுத்­து­மா­றும் பணித்­தது. ஆளு­ந­ரின் செய­ல­கத்­தி­டம் முன்­வைக்­கப்­பட்ட கேள்­விக்கு வழங்­கப்­பட்ட பதி­லா­னது, ‘வட்­டுக்­கோட்­டைக்கு வழி என்ன என்று கேட்­டால் துட்­டுக்கு ரண்டு கொட்­டைப்­பாக்கு’ என்­ப­தைப் போல கேட்­டது என்­னவோ, சொன்­னது வேறென்­னவோ  என்ற பாணி­யில் இருந்­தது. இதோ வாச­கர்­க­ளுக்­காக, ஆளு­நர் செய­ல­கத்­தி­டம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளும், அவற்­றுக்­கான பதில்­க­ளும்- கேள்வி: வடக்கு மாகாண ஆளு­நர் இந்த ஆண்டு இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது இந்­தி­யப் பய­ணம் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­னதா? பதில்: ஆம், சனா­தி­பதி செய­ல­கத்­தில் முறை­யான அனு­மதி பெறப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்­வ­மான பய­ணம் கேள்வி:  அவ­ரது பய­ணத்­துக்­கான செலவு எவ்­வ­ளவு? (விமான சிட்டை, தங்­கு­மி­டம். இந்­தி­யா­வில் போக்­கு­வ­ரத்­துச் செலவு உள்­ளிட்ட விரி­வான அறிக்கை) பதில்: நிதி அமைச்­சின் M.F.01/2015/01 ஆம் இலக்க 2015.05.15 ஆம் திக­திய  சுற்­ற­றிக்­கைக்கு அமைய (https://www.treasury.gov.lk/web/ministry-of-finance-circular/section/2015 எனும் இணைப்­பி­லி­ருந்து தர­வி­றக்கிக் கொள்­ள­லாம்) கொடுப்­ப­ன­வு­கள் யாவும் கொடுப்­ப­னவு அதி­கா­ரம் பெற்­ற­வர்­க­ளால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த சுற்றறிக்­கைக்கு உட்­பட்ட வகை­யில் அப்­போ­தி­ருக்­கும் கட்­டண அடிப்­ப­டை­யில் விமான பய­ண­சீட்­டுக்­கான கட்­ட­ணம் ஒரு­நா­ளுக்­கான இடை­நேர் செல­வு­கள் படி ,நாளுக்­கான இணைந்த படி என்­பன மாத்­தி­ரம் பதி­னொரு கடமை நாள்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­தக்­கொ­டுப்­ப­ன­வு­கள் 25.04.2022 ஆம் திக­தி­யி­லி­ருந்த அமெ­ரிக்க டொலர் நாணய மாற்று விகி­தத்­தின்­படி இலங்கை ரூபா­வில் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. கேள்வி: உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்­திற்­கான நோக்­கம்? பய­ணத்­தின் போது ஆளு­நர் சந்­தித்­த­வர்­க­ளின் விவரங்­கள்? பதில்: இலங்கை சன­நா­யக சோச­லிச குடி­ய­ர­சின் அர­ச­மைப்­பின் அத்­தி­யா­யம் XVII  154 ஆ பிரி­வின்­படி ஜனா­தி­ப­தியே ஆளு­நரை நிய­ம­னம் செய்­கின்­றார். 2016 ஆம் ஆண்­டின் 12 ஆம் இலக்க தக­வ­லுக்­கான உரி­மைச்­சட்­டம் பாகம்  II இன் (அ) பிரி­வின் பிர­கா­ரம் சம்­பந்­தப்­பட்ட ஆள் அத்­த­கைய வெளி­வி­டு­கைக்கு எழுத்­தில் சம்­ம­த­ம­ளித்­தி­ருத்­தல் வேண்­டும். கௌரவ ஆளு­நர் குறித்த விட­யங்­கள் தொடர்­பான தக­வல்­களை ஜனா­தி­பதி செய­ல­கத்­தில் பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி­ய­மை­யால் தக­வல் கோரிக்­கை­யா­ள­ருக்கு குறித்த தக­வல்­களை முழு­மை­யாக வழங்கமுடி­ய­வில்லை. குறித்த தக­வல்­களை ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­லாம் . கேட்ட கேள்­விக்­கு­ரிய பதிலை ஆளு­நர் செய­ல­கம் வழங்­காமை தொடர்­பில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து மீள­வும் இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திகதி தக­வல் அறி­யும் உரி­மைக்­கான ஆணைக்­குழு அது தொடர்­பில் விசா­ர­ணை­ களை மேற்­கொண்­டது. இதன்­போது வடக்கு ஆளு­ந­ரின் செய­லர் பொ.வாகீ­சன் முன்னிலையாகியிருந்தார். ஆணைக்­குழு, கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்­கு­ரிய பதில் வழங்­கப்­ப­டாமை தொடர்­பில் ஆளு­ந­ரின் செய­ல­ரி­டம் கேள்வி எழுப்­பி­யது. இதன்­போது ஆளு­ந­ரின் செய­லர்,  வடக்கு மாகாண ஆளு­நரே அவ்­வாறு பதி­ல­ளிக்­கு­மாறு பணித்ததா­கக் குறிப்­பிட்­டார். இத­னை­ய­டுத்து  ஆளு­ந­ரின் செய­ல­ரி­டம், முன்­னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சேன, கோத்­தா­பய ராஜ­பக்ச ஆகி­யோ­ரது பயண விவ­ரங்­கள் தொடர்­பில் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடான கோரிக்­கை­க­ளுக்கு பதி­ல­ளிக்­கு­மாறு ஆணைக்­குழு வழங்­கிய கட்­ட­ளை­க­ளைச் சுட்­டிக்­காட்டி , ’ஜனா­தி­ப­தியே தக­வல் அளிக்­கை­யில் ஆளு­நர் பதி­ல­ளிக்­கா­மல் நழு­வ­மு­டி­யாது. எனவே உட­ன­டி­யா­கப் பதில் வழங்­குங்­கள்’ எனத் தெரி­வித்து அதனை ஆளு­ந­ரின் செய­லர் ஏற்­றுக்­கொண்டு திருத்­தப்­பட்ட பதிலை வழங்­கி­னார். அதில், இந்­தி­யா­வுக்­கான பய­ணத்­துக்கு ஜனா­தி­ப­தி­யின் செய­லர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­து­டன் இந்­தப் பய­ணம் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­னது என்று ஆளு­ந­ரின் செய­லர் குறிப்­பிட்­டுள்­ளார். ஆனால் 15 நாள்­கள் பய­ணத்­தில் 4 நாள்­களை தனிப்­பட்ட விடு­மு­றை­யாக ஆளு­நர்  எடுத்­துள்­ளார் என­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். உத்­தி­யோ­க­பூர்வ பய­ண­மாக வடக்கு மாகா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­திச் சென்ற ஆளு­நர் தனிப்­பட்ட விடு­மு­றை­யை­யும் அதில் கழித்­துள்­ளார். மேலும் ஆளு­ந­ரின் இந்­தி­யப் பய­ணத்­துக்­காக மக்­க­ளின் வரிப்­ப­ண­மான 17 லட்­சத்து 92 ஆயி­ரத்து 323 ரூபா 75 சதம் செல­வி­டப்­பட்­டுள்­ளது. இதில், இந்­தி­யா­வுக்­கான இரு வழி விமா­னப் பய­ணத்­துக்­காக ஆளு­நர் 68 ஆயி­ரத்து 126 ரூபா செல­விட்­டுள்­ளார். 2022ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் வர்த்­தக வகுப்பு பய­ணங்­க­ளுக்­கா­கவே அவ்­வா­றா­ன­தொரு தொகை அற­வி­டப்­பட்­டி­ருந்­தது. மேலும் ஆளு­நர் இந்­தி­யா­வில் மேற்­கொண்ட உள்­ளூர்ப் பய­ணம், ஹொட்­டல் செலவு, உணவு என்­ப­வற்­றுக்­காக இணைந்த கொடுப்­ப­ன­வாக 14 லட்­சத்து 51 ஆயி­ரத்து 956 ரூபா­வும், அமை­யச் செல­வாக 2 லட்­சத்து 72 ஆயி­ரத்து 241 ரூபா 75 சத­மும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவை 11 நாள்­க­ளுக்கு மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் எஞ்­சிய 4 நாள்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் ஆளு­ந­ரின் செய­லர் பதி­ல­ளித்­துள்­ளார். ‘இந்­தி­யா­வு­ட­னான பொது­வான வர்த்­த­கச் சந்­தை­கள் தொடர்­பாக விவா­திப்­ப­தும் இலங்­கை­யின் வளர்ச்­சி­யில் பங்­கேற்­ப­தற்­கும், உத­வு­வ­தற்­கும் ஆர்­வ­மு­டைய முத­லீட்­டா­ளர்­களை கண்­ட­றி­வ­தும், இலங்கை மக்­க­ளின் திற­மை­களை மேம்­ப­டுத்­து­வ­து­டன் உல­க­ளா­விய சிறந்த நடை­மு­றை­களை அறி­தல் மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப மற்­றும் வணிக முறை­மை­களை இரு­த­ரப்­பா­ருக்­கும் நன்­மை­ய­ளிக்­கக்­கூ­டிய விதத்­தில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­தல் ‘ என்­ப­னவே  ஆளு­ந­ரின் இந்­தி­யப் பய­ணத்­துக்­கான நோக்­கங்­கள் என்று ஆளு­ந­ரின் செய­லர் தனது பதி­லில் குறிப்­பிட்­டுள்­ளார். ஆனால் இந்­தப் பய­ணத்­தின்­போது ஆளு­நர் அங்­குள்ள ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­துடன் இதன்­போது இந்­திய ஊட­கங்­க­ளுக்கு நேர்­கா­ண­லும் வழங்­கி­யுள்­ளார். ஆளு­நர் தனது இந்­தி­யா­வுக்­கான பய­ணத்­தின்­போது தமி­ழ­கம் தவிர்ந்த வேறு மாநி­லங்­க­ளின் அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள் எனப் பல­ரை­யும் சந்­தித்­துள்­ளார். எதிர்­வ­ரும் 28ஆம் திக­தி­யு­டன் ஆளு­நர் பய­ணத்தை மேற்­கொண்டு ஓராண்டு பூர்த்தி செய்­யப்­ப­டும் நிலை­யில், அவ­ரது இந்­தி­யப் பய­ணத்­தின் உத்­தி­யோ­க­பூர்வ நோக்­கம் நிறை­வே­றி­யதா என்ற கேள்­விக்கு செயற்­பாட்டு ரீதி­யில் இல்லை என்­பதே பதி­லா­கி­றது. அவர் கூறி­ய­தைப்­போன்று வடக்கு மாகா­ணத்­துக்கு அவ­ரது இந்­தி­யப் பய­ணத்­தால் இது­வரை நேரடி நன்­மை­கள் எது­வும் கிடைக்­க­வில்லை. சில­வே­ளை­க­ளில் ஆளு­நர்  தனிப்­பட்ட நலன்­களை இந்­தப் பய­ணத்­தின் ஊடாக அடைந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை. ஒட்­டு­மொத்­தத்­தில் வடக்கு மாகா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட பணம் வீண­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை பொரு­ளா­தார ரீதி­யில் வீழ்ச்­சி­ய­டைந்து வங்­கு­ரோத்­த­டைந்து மக்­கள் இன்று துன்­பப்­ப­டு­ வ­தற்­கும், தற்­போது அதி­க­ரித்த வரி­க­ளால் அல்­லல்­ப­டு­வ­தற்­கும் இவ்­வா­றான வீணற்ற பய­ணங்­க­ளும், சொகுசு சுற்­று­லாக்­க­ளும் ஒரு கார­ணமே. ஓர் ஆளு­ந­ரின் ஒரு பய­ணத்­துக்கே இவ்­வ­ளவு செலவு என்­றால்…..? TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image